Saturday, July 24, 2004

அவள் - சற்றே சிறிய சிறுகதை

காலை ஆறு மணி ஆகிவிட்டது, இன்னும் சுசீலா வீடு திரும்ப வில்லை. "வழக்கமாக ஐந்து மணிக்கே திரும்பி விடுவாளே " என்று முணுமுணுத்துக்  கொண்டே கவலையுடன் வாசலில் நின்றுக் கொண்டிருந்தான். "என்னப்பா இன்னும் அம்மா ஆஃபிஸிலிருந்து வரலயா", என்றூ ஆனந்த் கண்ணைக்
கசக்கிக் கொண்டே படுக்கையிலிருந்து எழுந்துவந்தான்.

"இல்லடா கண்ணா, நீ போய் ப்ரஷ் பண்ணு, நான் உனக்கு போர்ன்விட்டா போட்டு எடுத்து வரேன்"

"போர்ன்விட்டாவா ? நான் ஹார்லிக்ஸ்தான் குடிப்பேன். உனக்கு ஒன்னும் தெரியலப்பா" என்று சொல்லிவிட்டு கிண்டலாக சிரித்துக்கொண்டே
பாத்ரூமுக்குள் ஓடினான். கொஞ்சம் சங்கடமாகத்தான் ரமேஷுக்கு இருந்தது. அதே சமயம் மனைவியை நினைத்துப் பெருமையாகவும் இருந்தது.

"இரவிலும் வேலை செய்து விட்டு, பகலிலும் ஒய்வெடுக்காமல் எனக்கு பணிவிடைகள் செய்து, ஆனந்தை ஸ்கூலுக்கு கிளப்பி, எவ்வளவு நல்லா
குடும்பத்தை நிர்வாகம் செய்ரா. வேலைக்கு போக வேண்டாமுன்னு சொல்ல முடியல, ஆனந்தாவது நல்ல படிக்கணும். பாவம் சுசீலா".

"என்னங்க ரொம்ப யோசனையில இருக்கீங்க ?" என்று சுசீலா, ரமேஷின் தோளில் தட்டி அவனை கவலைகளின் பிடியில் இருந்து விடுவித்தாள்.

"ஏன் சுசி, இவ்வளவு லேட்டு. நான் ரொம்ப பயந்துட்டேன்"

"என்ன பயம் ? எனக்கு என்ன இது புதுசா.. பட் இந்த ஆம்பிளைங்க இருக்காங்க பாரு...ஷாவனிஸ்ட்ஸ். காண்டம் யூஸ் பண்ணு எத்தனை விள்ம்பரம் போடரான். தான் சொல்றது தான் சட்டம். சீக்கிரம் போனும்னாலும் கேட்க மாட்டங்க"

"ஷ்ஷ்...சுசி....மெதுவா பேசு, ஆனந்த் முழுச்சிட்டான். நீ போய் தூங்கு இன்னைக்கி. நானும் ஆனந்தும் ஹோட்டல்ல சாப்டுக்குரோம். அப்படியே
அவனை ஸ்கூல்ல விட்டுடுறேன்" என்று சொல்லி அவள் நெத்தியில் ஓர் முத்தமிட்டான்.

3 Comments:

At 7:37 AM, Anonymous Anonymous said...

neenga sujaatha fana? appuram ennanga dheedernu ippadi oru post?

 
At 11:12 AM, Anonymous Anonymous said...

happappa....kadhai endra reedhiyil thiruppam nandraga thaan irundhadhu aanaal mutrilum mur pokkana sindhanai(recursive sindhanai alla :)) !!!!!!!! nija vazhvil idhu saadhiyama.....illave illaiye..... kadhaigal nijangalai thazhuviyavai yaga irundhaal migavum nandraga irukkum..........

 
At 7:14 AM, Blogger sanjeeth said...

idhu niraiya perrukku pudikkama irukkalam , yedharthama illenu ninaikkalam.aaan naan paartha oru sambavam than idhukku "inspiration". Yen avangallukkum oru azhagana vaazhkai irukkka koodadhu?

 

Post a Comment

<< Home

Powered by Blogger