Tuesday, April 19, 2005

மீண்டும் நான்...

பல நாட்களாக முடங்கிக் கிடந்த வலைப்பதிவினை தூசு தட்டி மறுபடியும் துவங்குகிறேன். "ஏன் நான் இத்தனை நாள் எழுதவில்லை?"(ஏதோ நான் எழுதுவதை நிறுத்திவிட்டதால்,அண்ட சராசரமே அந்தரத்தில் நின்றது போல்,மன்னிப்புக் கேட்டு ஒரு விளக்கம்) என்றெல்லாம் எழுதப் போவதில்லை;அப்படி எழுதினாலும் அபத்தம். "நான் ஏன் மறுபடி எழுதுகிறேன்?" என்பதற்கு மட்டும் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. என் வலைப்பதிவுகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டிருந்த போது,(என் ஆங்கில வலைப்பதிவுகளை அடக்கம் செய்தாயிற்று :( , அதில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அதன் தலைப்பு தான் - "Recursive சிந்தனை" ) ஒரு அழகிய கவிதை, மின்னஞ்சல் வடிவமாய் என்னை வந்தடைந்தது - இன்ப அதிர்ச்சி!
lookingthroughmyverses
என்றோ ஒரு நாள், இப்பக்கத்தில் நான் செய்த முதல் பதிவில் - "இப்பதிவும் இனி வர இருக்கும் அனைத்துப் பதிவுகலும் என் நண்பன் சரவண ராஜாவுக்கே சமர்ப்பணம். ஐந்தே நிமிடங்களில் இம் மொழியின் மேல் காதல் உண்டாகச் செய்தவன்."- என எழுதியிருந்தேன். அவ்வரிகளும் Google-ம் செய்த உதவி;தொலைந்த நண்பர்கள் இணைய உதவிய இவ்வலைப்பினை அழிக்க மனம் வரவில்லை,தொடருகிறேன்.இணையத்திற்கு என் முகவரி இருக்கட்டுமே!

Powered by Blogger